Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: Monisha Sat, 31 Oct 2020 4:50:45 PM

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 158 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 723 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 672 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரியில் 1,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chengalpattu,kanchipuram,tiruvallur,corona virus,infection ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கொரோனா வைரஸ்,பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சகாதார நிலையத்திற்குட்பட்ட 35, 39 வயதுடைய ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 381 உயர்ந்தது. 487 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 37 ஆயிரத்து 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 90 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,052 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 618 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

Tags :