திருவள்ளூர் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு 61 பேர் உயிரிழப்பு
By: Monisha Mon, 29 June 2020 1:51:14 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகுது. நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1079 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நோய் பாதிப்பில் இருந்து மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 53,762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர். 21094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3715 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 61 பேர் உயிரிழந்துள்ளனர்.