Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செல்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனோ பரிசோதனை; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

செல்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனோ பரிசோதனை; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

By: Nagaraj Tue, 08 Dec 2020 8:31:07 PM

செல்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனோ பரிசோதனை; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு... கொரோனா பரிசோதனையை செல்போன் மூலம் 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையில் கொரோனா பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 4 முதல் 8 மணி நேரமாகிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா தொற்றை துல்லியமாகக் கண்டறியும் புதிய சோதனை முறையை அமெரிக்காவின் யு.சி.பெர்கிலே மற்றும் கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதுகுறித்து பெர்கிலே பயா இன்ஜினீயரிங் பேராசிரியர் டேனியல் கூறியதாவது, சிஆர்ஐஎஸ்பிஆர் முறையில் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கொரோனா தொற்றை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு கருவியை உருவாக்கி உள்ளோம். மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை இந்த கருவியில் வைக்க வேண்டும். அந்த கருவியின் மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும்.

cellphone,corono,experiment,scientists ,செல்போன், கொரோனோ, பரிசோதனை, விஞ்ஞானிகள்

சளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி, கொரோனா வைரஸ் கிருமிகளை ஒளிவில்லைகளாக மாற்றிக் காட்டும். ஸ்மார்ட்போன் கேமரா அந்த ஒளிவில்லைகளை பதிவு செய்யும்போது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவாக கண்டறிய முடியும். அவருக்கு எந்த அளவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

இதன்மூலம் 30 நிமிடங்களில் துல்லியமாக முடிவை அறிந்து கொள்ளலாம். எந்த வகையான ஸ்மார்ட்போனையும் பொருத்தும் வகையில் எங்களது கருவியை வடிவமைத்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்ற ஜெனிபரும் இந்த ஆராய்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளார். அவர் கூறுகையில், 'எங்களது பரிசோதனை நடைமுறை மூலம் விரைவாக, துல்லியமாக கொரோனா தொற்று முடிவை அறிந்துகொள்ள முடியும். ஆய்வக வசதி குறைவாக உள்ள பகுதிகளில் எங்களது கருவி பயனுள்ளதாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.

Tags :
|