Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஜிபி அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

டிஜிபி அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

By: Nagaraj Fri, 29 May 2020 1:12:16 PM

டிஜிபி அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

டிஜிபி அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா... சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, டி.ஜி.பி., - கூடுதல் டி.ஜி.பி.,க்கள் என, போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் பணியாற்று கின்றனர். இவர்களுக்கான முகாம் அலுவலகம் மற்றும் உளவுத்துறை, தொழில் நுட்ப பிரிவு, மோட்டார் வாகன பிரிவு என, பல பிரிவுகளின் அலுவலகங்களும் செயல்படுகின்றன.

corona,dgp office,technical division,police,panic ,கொரோனா, டிஜிபி அலுவலகம், தொழில்நுட்ப பிரிவு, போலீசார், பீதி




இந்த அலுவலகங்களில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். முதலில் உளவுத்துறை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும், இரண்டு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

உடனே அந்த கட்டுப்பாடு அறை மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்தவர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், சென்னை டி.ஜி.பி. அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள்ளனர். இன்று ஒரே நாளில் ஒரு டி.எஸ்.பி., ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறை தலைமையிடமான டி.ஜி.பி., அலுவலகத்திலேயே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு பணிபுரியும் போலீசார் பீதியில் உள்ளனர்.

Tags :
|
|