Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் இன்றும் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்றும் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Fri, 10 July 2020 8:17:11 PM

மதுரை மாவட்டத்தில் இன்றும் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக இருப்பது மதுரைதான். இந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 200க்கும் அதிகமான பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று வரையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,299 ஆக அதிகரித்துள்ளது.

corona virus,chengalpattu,pudukottai,madurai,increase ,கொரோனா வைரஸ், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மதுரை, அதிகரிப்பு

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,509 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உள்ளது.

இதேபோல, சென்னையை தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டிலும் இன்று 100 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதித்தோர் எண்ணிக்கை 7,486 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையிலும் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 206 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :