Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,509 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,509 ஆக உயர்வு

By: Monisha Fri, 10 July 2020 12:47:09 PM

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,509 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 5,299 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

madurai,coronavirus,infection,death,treatment ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 73 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 5,299 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,203 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|