Advertisement

கோவையில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Wed, 01 July 2020 10:10:03 PM

கோவையில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று

ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா... கோவை செட்டிவீதியை சேர்ந்த 13 பேர் உள்பட ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில், ஆர்.ஜி.புதுார்., பீளமேடு பகுதிகளை போன்று தற்போது செட்டி வீதியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று செட்டி வீதியில் மட்டும் 66 வயது முதியவர், 3 வயது சிறுமி, 7 வயது சிறுவன் உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட இருப்பிடத்தின் அருகில் அல்லது அவர்கள் சென்று வந்த பகுதியில் எடுக்கப்பட்ட மாதிரியில் இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

coimbatore,chettietheru,discharge,corona,damage ,கோவை, செட்டித்தெரு, டிஸ்சார்ஜ், கொரோனா, பாதிப்பு

மசக்காளிபாளையம், பாலன் நகரில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல், சாய்பாபா காலனி, சூலுார், கோவில்மேடு, ரராமநாதபுரம், கரும்புக்கடை, ஆசாத் நகர் என 11 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்தவர்களில் டவுன்ஹால், சலீவன் வீதி, உக்கடம், பெரியகடை வீதி, செல்வபுரம் பகுதிகளை சேர்ந்த ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

விமானம் மற்றும் ரயில் மூலம் கோவை வந்த 8 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில், 21 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 45 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் கொரோனா எண்ணிக்கை 538ல் இருந்து 561 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த, வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் உள்பட 29 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Tags :
|