Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு

மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு

By: Monisha Tue, 06 Oct 2020 4:03:28 PM

மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் 60 சதவீத பஸ்களும், குறிப்பிட்ட சில ரெயில்களும் மட்டும் இயக்கப்படுகிறது. ஆனால், பிறமாநிலங்களில் ரெயில் சேவை பெரும்பாலும் தொடங்கி விட்டது. இந்த நிலையில், தென்மேற்கு ரெயில்வே மண்டலத்தில் உள்ள மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்துக்கு சென்னை, மாயவரம் மற்றும் தூத்துக்குடிக்கு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரெயில்வேயின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த ரெயில்சேவை உடனடியாக தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரெயில்வே மண்டலத்தில் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து சென்னை சென்டிரல் வரை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

mysore,thoothukudi,express train,chennai,special train ,மைசூர்,தூத்துக்குடி,எக்ஸ்பிரஸ் ரெயில்,சென்னை,சிறப்பு ரெயில்


அதேபோல, தற்போது தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடி மற்றும் பெங்களூரு,மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டாலும் சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் ஓடத்தொடங்கினால் மதுரை கோட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் முதல் ரெயில் தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இருக்கும். மேற்கு ரெயில்வே சார்பிலும் நெல்லைக்கு ரெயில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நெல்லையில் இருந்து வாரம் இருமுறை குஜராத் மாநிலம் ஹாப்பாவிற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை மறுபடியும் இயக்க மேற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரெயிலும் விரைவில் ஓடத்தொடங்கும் என தெரிகிறது.

Tags :
|