Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்

மதுரையில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்

By: Monisha Tue, 06 Oct 2020 4:32:58 PM

மதுரையில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்

மதுரையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 62 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்றைய பாதிப்புடன் சேர்த்து மதுரையில் இதுவரை 16 ஆயிரத்து 970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 90 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களை தவிர 660 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேறு சில நோய்கள் இருப்பதாகவும், கொரோனா பாதிப்புடன் அந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்களும் விரைவில் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார்கள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

madurai,corona virus,infection,fatalities,discharge ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,உயிரிழப்புகள்,டிஸ்சார்ஜ்

மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்ததுபோல் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தினமும் 10 பேர் வரை கொரோனாவால் பலியாகினார்கள். தற்போது இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருவதே முக்கிய காரணமாக உள்ளது.

இந்தநிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் ஒருவர் நேற்று இறந்து போனார். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.

Tags :