Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூதலூரில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

பூதலூரில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

By: Nagaraj Wed, 01 July 2020 1:33:59 PM

பூதலூரில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தந்தை, மகன் மரணமடைந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்டம் பூதலூரில் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பென்னிக்‌ஸ் ஆகியோரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ள சாத்தான்குளம் காவல் துறையினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை கைது செய்து உரிய தண்டனையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

 ,மக்கள் உரிமை, கூட்டமைப்பு, கண்டனம், ஆர்ப்பாட்டம், சாத்தான்குளம்

செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையை கண்டித்தும். தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து செயலாளர் மகேந்திரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ. ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டமைப்பின் செயல்வீரர் சிவக்குமார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் இளங்கோ, செந்தில்குமார், அற்புதராஜ், வீரசிங்கம், பிரபாகரன், காரல்மார்க்ஸ், சுந்தரவடிவேல், செந்தில், சிலம்பரசன், சதாசிவம், காரல்மார்க் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததை கண்டு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :