Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்

விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்

By: Monisha Wed, 15 July 2020 1:41:16 PM

விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்

கொரோனா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்கி வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது.

இதில் முதல்கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் ‘ஹைடெக் லேப்’ மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளதால் மாணவர்கள், பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வரும்போது தங்களுடைய மடிக்கணினியையும் கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

villupuram,plus 2,students,textbooks,laptop ,விழுப்புரம்,பிளஸ்2,மாணவர்கள்,பாடப்புத்தகங்கள்,மடிக்கணினி

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 படிக்க உள்ள 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் அந்தந்த பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு சென்று வகுப்பு வாரியாக புத்தகங்களை பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|