Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Tue, 29 Sept 2020 10:13:40 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 179
செங்கல்பட்டு - 2,189
சென்னை - 11,043
கோவை - 5,117
கடலூர் - 1,492
தர்மபுரி - 1,002
திண்டுக்கல் - 484
ஈரோடு - 1,120
கள்ளக்குறிச்சி - 498
காஞ்சிபுரம் - 895
கன்னியாகுமரி - 990
கரூர் - 492
கிருஷ்ணகிரி - 862
மதுரை - 696
நாகை - 528
நாமக்கல் - 973
நீலகிரி - 930
பெரம்பலூர் - 130
புதுக்கோட்டை - 718
ராமநாதபுரம் - 154
ராணிப்பேட்டை - 400
சேலம் - 2,768
சிவகங்கை - 264
தென்காசி - 442
தஞ்சாவூர் - 1,169
தேனி - 527
திருப்பத்தூர் - 550
திருவள்ளூர் - 1,589
திருவண்ணாமலை - 972
திருவாரூர் - 1,079
தூத்துக்குடி - 593
திருநெல்வேலி - 857
திருப்பூர் - 1,633
திருச்சி - 768
வேலூர் - 885
விழுப்புரம் - 997
விருதுநகர் - 292
விமானநிலைய கண்காணிப்பு - 27
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :