Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.-காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.-காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

By: Monisha Wed, 02 Dec 2020 11:20:06 AM

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.-காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வெற்றி பெறும் நோக்கத்தோடு தேர்தலை சந்திக்க தங்களை தயார் படுத்தி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தங்கள் செல்வாக்கை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

assembly,election,dmk,congress,negotiations ,சட்டமன்றம்,தேர்தல்,திமுக,காங்கிரஸ்,பேச்சுவார்த்தை

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார்கள். இவர்கள் வரும் 2021 சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2021 சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|