Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக தலைவர்- ஆளுநர் சந்திப்பு; ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து வலியுறுத்தல்

திமுக தலைவர்- ஆளுநர் சந்திப்பு; ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து வலியுறுத்தல்

By: Monisha Tue, 24 Nov 2020 2:35:15 PM

திமுக தலைவர்- ஆளுநர் சந்திப்பு; ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இந்த சந்திப்பில் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆளுநரை சந்தித்த பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

stalin,governor,meeting,convicts,release ,ஸ்டாலின்,ஆளுநர்,சந்திப்பு,குற்றவாளிகள்,விடுதலை

செய்தியாளர்கள் சந்திப்பின் போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தினோம். மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறினார்..

இது தொடர்பாக தி.மு.க. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தை தமிழக ஆளுநரிடம் வழங்கினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|