கூடுதல் மின் கட்டண வசூலை கண்டித்து இன்று திமுக ஆர்ப்பாட்டம்
By: Nagaraj Tue, 21 July 2020 3:39:57 PM
கூடுதல் மின்கட்டண வசூலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து திமுகவினர் தங்களின் வீடுகளின் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது.
பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம்
கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது. இதனிடையே மின்கட்டண
உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து காணொலியில் திமுக மாவட்ட செயலாளர்,
எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மேற்கொண்டார்.
இந்நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி
ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.