Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும்...மு.க.ஸ்டாலின்

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும்...மு.க.ஸ்டாலின்

By: Monisha Wed, 09 Sept 2020 5:12:27 PM

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும்...மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தபடியே பொதுக்குழு உறுப்பினர்கள், காணொலி வழியாக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன்.

dmk,general meeting,mk stalin,speech,ruling party ,திமுக,பொதுக்குழு கூட்டம்,முக ஸ்டாலின்,உரை,ஆட்சி

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் மிசா காலத்தில் சிறைக்கு சென்றவர்கள். டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி., 3 முறை மத்திய அமைச்சராக இருந்தவர். கருணாநிதிக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு. மறைந்த தலைவர் கருணாநிதி வகித்த பொறுப்பு டி.ஆர்.பாலுவின் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது.

அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்கு பயன்படட்டும். ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களானது மிகுந்த மகிழ்ச்சி. கட்சியின் வளர்ச்சிக்கு புதிய நிர்வாகிகள் தங்கள் மொத்த திறமையையும் பயன்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
|
|