Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்- பொன். ராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்- பொன். ராதாகிருஷ்ணன்

By: Monisha Mon, 21 Dec 2020 11:14:33 AM

எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்- பொன். ராதாகிருஷ்ணன்

தி.மு.க.வை 234 தொகுதிகளிலும் வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது, பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். கிராமங்கள், விவசாய குடும்பங்கள் முன்னேற்றம் மட்டுமே நாட்டின் வளத்தை உயர்த்தும்.

election,voters,constituency,interview,farmers ,தேர்தல்,வாக்காளர்கள்,தொகுதி,பேட்டி,விவசாயிகள்

இந்த அடிப்படையில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் இந்த சட்டத்தை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற நோக்கில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ள தி.மு.க.வை 234 தொகுதிகளிலும் வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என அவர் அவர் தெரிவித்தார்.

Tags :
|