Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

By: Monisha Tue, 24 Nov 2020 11:30:20 AM

புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நிவர் புயல் குருத்து சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். பேட்டியின் பொது அவர் கூறியதாவது:-

நிவர் புயல் கரையை கடக்கும்போது மக்கள் வாகனங்களில் எங்கும் செல்லக்கூடாது. புயல் கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வரும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

storm,public,tension,warning,disaster ,புயல்,பொதுமக்கள்,பதற்றம்,எச்சரிக்கை,பேரிடர்

புயலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்; பொதுமக்கள் அமைதியுடன் செயல்பட வேண்டும். அனைத்து நிவாரண முகாம்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றி உணவு மற்றும் தண்ணீர் தரப்படுகிறது.

நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணித்து கள ஆய்வு மேற்கொள்ளவும், ஏரி, குளங்களில் கரை உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|