Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டசபை தேர்தல்- இந்திய தேர்தல் ஆணைய குழு தமிழகம் வருகை

சட்டசபை தேர்தல்- இந்திய தேர்தல் ஆணைய குழு தமிழகம் வருகை

By: Monisha Wed, 16 Dec 2020 6:08:33 PM

சட்டசபை தேர்தல்- இந்திய தேர்தல் ஆணைய குழு தமிழகம் வருகை

தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணைய குழு டிசம்பர் 21-ம் தேதி மற்றும் 22-ம் தேதி தமிழகம் வருகிறது. அப்போது சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

tamil nadu,election,parties,commission,tasks ,தமிழகம்,தேர்தல்,கட்சிகள்,ஆணையம்,பணிகள்

தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் 21-ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. அதன்பின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் இருந்து மனுக்களை பெறுகிறது.

டிசம்பர் 22-ம் தேதி தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெறும். அப்போது தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து ஆராயப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :