Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை

By: Monisha Sun, 20 Dec 2020 2:43:13 PM

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை

தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே உள்ளதால் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க ஐந்து மாநிலங்களுக்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை செல்கிறார்கள். அதன்படி இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு நாளை தமிழகம் வருகிறது. துணை தேர்தல் கமி‌ஷனர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர். சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் கமி‌ஷன் செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விமான நிலையம் சென்று வரவேற்கிறார். பின்னர் இந்த குழுவினர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு பகல் 12.00 மணியளவில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா? அல்லது இரண்டு கட்டமாக நடத்தலாமா? என்பது பற்றி ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக கருத்து கேட்கிறார்கள். அப்போது ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் கொடுக்கும் மனுக்களையும் பெற்று கொள்கிறார்கள். அதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடை பெறுகிறது.

election,debate,consultation,petition,meeting ,தேர்தல்,விவாதம்,ஆலோசனை,மனு,கூட்டம்

இந்த கூட்டம் முடிந்ததும் 22-ம் தேதி தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர், உளவுப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூற உள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பொது பிரச்சினைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கிறார்கள். அதன் பிறகு நிருபர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்கள். அப்போது தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேச உள்ளனர். அதன் பிறகு டெல்லி செல்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

Tags :
|