Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அலெக்ஸ்சாண்டரை பெலாரஸ் நாட்டின் அதிபராக அங்கீகரிக்க ஐரோப்பிய யூனியன் மறுப்பு

அலெக்ஸ்சாண்டரை பெலாரஸ் நாட்டின் அதிபராக அங்கீகரிக்க ஐரோப்பிய யூனியன் மறுப்பு

By: Karunakaran Fri, 25 Sept 2020 2:41:34 PM

அலெக்ஸ்சாண்டரை பெலாரஸ் நாட்டின் அதிபராக அங்கீகரிக்க ஐரோப்பிய யூனியன் மறுப்பு

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்ட பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அங்கு 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றிபெற்ற அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ, அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

eu,alexander,president,belarus ,ஐரோப்பிய ஒன்றியம், அலெக்சாண்டர், தலைவர், பெலாரஸ்

பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ நேற்று பெலாரஸ் நாட்டின் அதிபராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து அந்நாட்டு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தற்போது பெலாராஸ் நாட்டின் அதிபராக அலெக்ஸ்சாண்டர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடுகளுடன் நடைபெற்றுள்ளதால், அவர் அதிபராக அங்கீகரிக்க முடியாது என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது. அலெக்ஸ்சாண்டர் பதவி விலகக்கோரி 1 மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

Tags :
|