Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்- கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்- கமல்ஹாசன்

By: Monisha Tue, 22 Dec 2020 4:19:09 PM

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்- கமல்ஹாசன்

பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாததால் திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் வேனில் இருந்தபடி கமல்ஹாசன் மக்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் முழு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அரசும் அரசியலும் அதன் அடிப்படையில் அமைய வேண்டும்.

நான் தாமதமாக அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வந்துள்ளேன். உலக தரத்தில் திரைப்படங்களை கொடுத்தால் மட்டும் போதாது. என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். என் வாழ்க்கை அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று விரும்புகிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கைகோர்க்க வேண்டும். உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.

election,campaign,meeting,meeting,plans ,தேர்தல்,பிரச்சாரம்,சந்திப்பு,கூட்டம்,திட்டங்கள்

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் செய்யாறு மணல் கொள்ளையைத் தடுப்போம். பழங்குடி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம். நீங்கள் அன்புடன் என்னை ஆண்டவர் என்றழைக்கிறீர்கள். உண்மையில் நான் உங்களது தொண்டன். தமிழகத்தில் முறையான பாசன வசதி இல்லை. நீர் மேலாண்மை கவனிக்கப்படவில்லை. மராமத்து பணிகளை தமிழக அரசுதான் செய்வது போல் சொல்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்களையும் சீரமைப்போம்.

முதல் முறை ஆட்சிக்கு வந்ததுமே அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம். தேர்தலுக்கு முன்பே நமது கட்சித் தொண்டர்கள் வீடு வீடாக சென்று நமது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தலின் போது பொதுமக்கள் கடைசிநேர கண்கட்டி வித்தையில் மயங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் ஒற்றை விரலில் வைக்கும் முத்திரை மை தான் நாளைய அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கும் என அவர் பேசினார்.

Tags :