Advertisement

கஞ்சா போதையில் அரசு பஸ்சை கடத்திய இளைஞரால் பரபரப்பு

By: Nagaraj Mon, 16 Nov 2020 09:13:36 AM

கஞ்சா போதையில் அரசு பஸ்சை கடத்திய இளைஞரால் பரபரப்பு

திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இளைஞர்...திருச்சியில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் அரசுப் பேருந்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தேனீர் அருந்த சென்றிருந்தனர்.

cannabis addiction,government bus,abduction,sedition,investigation ,கஞ்சா போதை, அரசு பேருந்து, கடத்தல், பரபரப்பு, விசாரணை

அப்போது மர்ம நபர் ஒருவர் பேருந்தை கடத்தி ஓட்டிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடனடியாக அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பேருந்தை மடக்கிப் பிடித்தனர்.

அந்த இளைஞரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் அஜித் என்பதும் அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :