Advertisement

28 ஆண்டுகளுக்கு பின் கூடிய ஏற்றுமதி அபிவிருத்தி சபை

By: Nagaraj Thu, 24 Sept 2020 10:02:53 PM

28 ஆண்டுகளுக்கு பின் கூடிய ஏற்றுமதி அபிவிருத்தி சபை

28 வருடங்களுக்கு பின் கூடியது... ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடியது.

1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும்.

அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையை மீள செயற்படுத்தி, முதலாவது சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு உரியதாகும். துறை பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்று கூட வேண்டுமென முன்மொழியப்பட்டது.

கைச்சாத்திடப்பட்டுள்ள பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் நாட்டுக்கு அனுகூலமானவையல்ல. நாட்டுக்கு அனுகூலமான அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய வகையில் இந்த உடன்படிக்கைகளை விரைவாக மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

28 years,maximum,president,prime minister,export ,28 வருடங்கள், கூடியது, ஜனாதிபதி, பிரதமர், ஏற்றுமதி

ஏற்றுமதித் துறையில் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையை விரைவாக மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் ஆரம்ப உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஏற்றுமதி காரணமாக கடந்த காலங்களில் ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரியதாகும். விவசாயிகளினதும் உற்பத்தியாளர்களினதும் நாட்டுக்கே உரிய உயர் தரத்துடன் கூடிய உயர்தரம் வாய்ந்த பயிர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Tags :