Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

By: Nagaraj Sat, 24 Oct 2020 7:17:03 PM

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

மேலும் 3 மாதம் அவகாசம்... ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு , ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.

period,extension,order,arumugasami,commission of inquiry ,காலஅவகாசம், நீட்டிப்பு, உத்தரவு, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன்

அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 9 வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|