பிரிட்டன் விமானங்களுக்கு ஜனவரி 3ம் தேதி வரை தடை நீட்டிப்பு
By: Nagaraj Thu, 31 Dec 2020 2:31:40 PM
தடை நீட்டிப்பு... பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிகமாக தடை செய்துள்ளன.
இந்தியாவில் டிசம்பர் 31ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல
நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
பிரிட்டன் நாட்டுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்
சிங் புரி தெரிவித்தார்.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 20 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.