காட்டுத்தீ அச்சுறுத்தலால் மக்களுக்கான வெளியேற்ற உத்தரவு நீட்டிப்பு
By: Nagaraj Tue, 25 Aug 2020 2:21:10 PM
காட்டுத்தீ அச்சுறுத்தி வருவதால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மக்களுக்கான வெளியேற்ற உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டனின் நகர எல்லைக்கு வெளியே உள்ள ஒகனகன்-சிமில்கமீன் பிராந்திய மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லிமீட்டர் மழை பெய்ததாகக் காட்டுத்தீ சேவை மதிப்பிட்டுள்ள போதிலும், அங்கு தொடர்ந்து காட்டுத்தீ அச்சுறுத்தி வருவதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவையின் சமீபத்திய மதிப்பீடு நெருப்பின்
அளவை சுமார் 2,035 ஹெக்டேரில் வைக்கிறது. இது வெள்ளிக்கிழமை நாள்
தொடக்கத்தில் இருந்ததை விட 35 ஹெக்டேர் அதிகம்.
தீயணைப்பு
அதிகாரிகள் எரியும் கடினமான நிலப்பரப்பு காரணமாக நெருப்பின் அளவை
துல்லியமாக அளவிடுவது கடினம் என்று கூறினர். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில்
குறைந்தபட்ச தீ செயற்பாடு இருப்பதாக அவர்கள் கூறினர்.