Advertisement

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

By: Monisha Tue, 22 Dec 2020 12:15:39 PM

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக மைசூரிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயில் சேவையை தென் மேற்கு ரயில்வே கால நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில்(வ.எண்.06236) அடுத்த மாதம் 30-ம் தேதி வரையிலும், நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில்(06235) அடுத்த மாதம் 31-ம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ரயில்களின் நேர அட்டவணையில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

passenger,train service,extension,time,change ,பயணிகள்,ரயில் சேவை,நீட்டிப்பு,நேரம்,மாற்றம்

அதாவது, மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயில் திண்டுக்கல்லிலிருந்து காலை 6.30 மணிக்கு பதிலாக 6.35 மணிக்கு புறப்படும். மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்கு புறப்படும். விருதுநகரிலிருந்து காலை 8.25 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக காலை 9.25 மணிக்கும், மணியாச்சியிலிருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக 10.00 மணிக்கும் புறப்படும். இந்த ரயில் தூத்துக்குடிக்கு காலை 11.10 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடியிலிருந்து மாலை 4.25 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும். மணியாச்சியிலிருந்து மாலை 5.02 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 5.45 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கும் புறப்படும். திண்டுக்கல்லிலிருந்து இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும். எனவே, பயணிகள் நாளை முதல் மாற்றப்பட்டுள்ள நேரத்தை கணக்கிட்டு உரிய ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|