Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை காலம் நீட்டிப்பு

கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை காலம் நீட்டிப்பு

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:05:50 AM

கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை காலம் நீட்டிப்பு

பாடசாலை விடுமுறை காலம் நீட்டிப்பு... எதிர்வரும் நவம்பர்- 09 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்த பாடசாலை விடுமுறைக் காலத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கப் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

மீண்டும் இரு வாரங்களின் பின் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

school,corona,infection,restaurant owner,holidays ,பாடசாலை, கொரோனா, தொற்று, உணவக உரிமையாளர், விடுமுறை

கொரோனா கண்டுபிடிப்பு: கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும் மயூரா உணவகத்தில் பணியாற்றும் பணியாளருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உணவகத்தின் உரிமையாளருக்கு கொரோனா தோற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
|
|