Advertisement

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

By: Monisha Thu, 05 Nov 2020 2:53:06 PM

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 220 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 5 ஆயிரத்து 972 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

mettur dam,water,rain,canal,delta irrigation ,மேட்டூர் அணை,தண்ணீர்,மழை,கால்வாய்,டெல்டா பாசனம்

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் இருந்து 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 97.28 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 96.32 அடியானது.

Tags :
|
|
|