Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனநாயகத்தை கெடுப்பதற்காக பேஸ்புக், வாட்ஸ்அப் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை கெடுப்பதற்காக பேஸ்புக், வாட்ஸ்அப் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

By: Karunakaran Tue, 01 Sept 2020 2:00:04 PM

ஜனநாயகத்தை கெடுப்பதற்காக பேஸ்புக், வாட்ஸ்அப் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ போன்ற சமூக ஊடகங்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது என சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளின் கட்டுரைகள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுப்பதற்காக ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’ ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்தியில் பா.ஜ.க.ஆட்சி அமைத்ததிலிருந்து காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

facebook,whatsapp,bjp,congress party ,பேஸ்புக், வாட்ஸ்அப், பாஜக, காங்கிரஸ் கட்சி

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுப்பதற்கும் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை சீரழிப்பதற்கும் ஆளும் பா.ஜ.க.வுடன் ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’ எவ்வாறு இணைந்துள்ளன என்பதை நம்பகமான சர்வதேச ஊடகங்கள் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த விசாரணை முடியும் வரை ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’புக்கான அனைத்து ஒப்பந்தங்களும் உரிமங்களும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Tags :
|