Advertisement

பூதலூரில் தந்தை பெரியார் நினைவுதினம் அனுசரிப்பு

By: Nagaraj Thu, 24 Dec 2020 2:55:47 PM

பூதலூரில் தந்தை பெரியார் நினைவுதினம் அனுசரிப்பு

தஞ்சை மாவட்டம் பூதலூரில் தந்தை பெரியாரின் 47வது நினைவு தினம் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் இருந்து பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையம் பெரியார் சதுக்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

periyar,remembrance day,adjustable,procession ,பெரியார், நினைவுதினம், அனுசரிப்பு, ஊர்வலம்

இதில் திராவிடர் கழக பூதலூர் ஒன்றிய தலைவர் அல்லூர் பாலு, நகர செயலர் செல்லமுத்து, மதிமுக கட்சி வீரசிங்கம், அமமுக தலைமை கழக பேச்சாளர் புண்ணியமூர்த்தி, குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இளங்கோ, ரமேஷ், கலையமுதன்.

விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் தமிழன் காமராஜ், மின்னல் ராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நாகராஜன், அன்பழகன் திருவையாறு தொகுதி வட்டார ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் நிர்வாகிகள் ஆட்டோ சங்க நிர்வாகி தங்க சம்பத், மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ. ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி அற்புதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :