Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தீவுத்திடலில் இன்று தொடங்குகிறது!

தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தீவுத்திடலில் இன்று தொடங்குகிறது!

By: Monisha Sat, 07 Nov 2020 09:00:58 AM

தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தீவுத்திடலில் இன்று தொடங்குகிறது!

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை இன்று தொடங்குகிறது. தீவுத்திடலில் பட்டாசு வாங்குவதற்காக சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் படையெடுத்து வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை இன்று தொடங்க உள்ளது. தீவுத்திடலில் 40 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு போல கூட்ட நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்றி, பட்டாசு வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

diwali festival,fireworks,sale,public ,தீவுத்திடல்,தீபாவளி பண்டிகை,பட்டாசு,விற்பனை,பொதுமக்கள்

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று மாலை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், பட்டாசு கடைகளுக்கான உரிமம் இன்னும் வியாபாரிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் திட்டமிட்டப்படி தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 80 கடைகள் அமைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் கடைகளின் எண்ணிக்கை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Tags :
|