Advertisement

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

By: Monisha Sat, 21 Nov 2020 09:25:49 AM

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் ஏராளமானவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நேற்று முன்தினம் காலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

fishermen,sri lanka navy,thoothukudi,keyboat,patrol ,மீனவர்கள்,இலங்கை கடற்படை,தூத்துக்குடி,விசைப்படகு,ரோந்து

திடீரென அவர்கள் தூத்துக்குடி மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது வலைகளை அறுத்து விட்டு விட்டு அங்கிருந்து தப்பி வந்தனர். தொடர்ந்து தருவைகுளத்தில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

மேலும், நீண்ட நேரம் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மாலை நேரத்தில் மீண்டும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வலைகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் தொடர்ந்து அவர்கள் மீன்பிடித்து வருவதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :