Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லைத்தீவில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்தது மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்தது மீனவர்கள் போராட்டம்

By: Nagaraj Fri, 18 Dec 2020 09:32:31 AM

முல்லைத்தீவில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்தது மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடந்தது. அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

attention,action,mullaitivu,fishermen,3rd day ,கவனயீர்ப்பு, நடவடிக்கை, முல்லைத்தீவு, மீனவர்கள், 3ம் நாள்

அத்துடன், இந்திய-இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தித் தருவமாறு முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் இன்று பிரோரணை நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|