Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேஆர்பி அணை 48 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேஆர்பி அணை 48 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By: Monisha Wed, 21 Oct 2020 11:22:40 AM

கேஆர்பி அணை 48 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை 48 அடியை எட்டியுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கேஆர்பி அணை 48 அடியை எட்டியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து 300 கனஅடியாக உள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையானது, 50 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறக்கப்படும்.

krp dam,flood,warning,rain,people ,கேஆர்பி அணை,வெள்ளம்,எச்சரிக்கை,மழை,மக்கள்

இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்றில் விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|