Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் மேற்கொண்ட புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் மேற்கொண்ட புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு

By: Nagaraj Mon, 13 July 2020 12:00:02 PM

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் மேற்கொண்ட புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு

கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் கேரளாவை சேர்ந்த ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பில், ஆகுமெண்டல் ரியாலிட்டி எனப்படும் புனைமெய்யாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியரின் முயற்சிக்கு பராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூர்கனாட் பகுதியில் உள்ள பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஷ்யாம் என்பவரே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

teacher shyam,new initiative,online,students ,ஆசிரியர் ஷ்யாம், புதிய முயற்சி, ஆன்லைன், மாணவர்கள்

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், நடத்தப்படும் பாடங்களுக்கு ஏற்றவாறு வகுப்பறைக்கு உள்ளேயே சூரிய மண்டலம், பசு, யானை, மழைபொழிவு போன்ற பிம்பங்களை உருவாக்கி, அது தொடர்பான விவரங்களை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் என்பது மந்தமான செயல் எனவும், அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க அதிக முயற்சி தேவை எனவும் ஆசிரியர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

Tags :
|