Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்; விமான ஊழியர் உட்பட 2 பேர் கைது

விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்; விமான ஊழியர் உட்பட 2 பேர் கைது

By: Monisha Tue, 29 Dec 2020 11:27:27 AM

விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்; விமான ஊழியர் உட்பட 2 பேர் கைது

துபாயில் இருந்து சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறைக்கு சந்தேகப்படும்படியாக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்ததும், மற்றொரு வாலிபர் கழிவறைக்குள் சென்றுவிட்டு வந்தார்.

இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர், விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் நிழல் ரவி(வயது 29) என தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது, 2 பொட்டலங்களில் 27 தங்க கட்டிகள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

gold,smuggling,flight attendant,arrest,seizure ,தங்கம்,கடத்தல்,விமான ஊழியர்,கைது,பறிமுதல்

துபாயிலிருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நியாமத்துல்லா ஹாத (35) என்பவர், சுங்க சோதனை இல்லாமல் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து தரவேண்டும் என்று கூறி கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றதாகவும், அதை தான் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல இருந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து நிழல் ரவியையும், தங்கத்தை கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதியையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Tags :
|
|