Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தியேட்டர்களை திறப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

தியேட்டர்களை திறப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

By: Monisha Tue, 06 Oct 2020 6:35:59 PM

தியேட்டர்களை திறப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

தியேட்டர்களை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தற்போது மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

"திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.

மொத்த இருக்கையில் 50% பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் பார்வையாளர்கள் முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

theaters,online tickets,mask,disinfectant,instructions ,தியேட்டர்கள்,ஆன்லைன் டிக்கெட்,முகக்கவசம்,கிருமிநாசினி,வழிமுறைகள்

ஒரேயொரு திரை மட்டுமேயுள்ள திரையரங்குகள் டிக்கெட் கவுண்டர்களை திறந்து கொள்ளலாம். ஆனாலும் ஆன்லைன் புக்கிங் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. தியேட்டருக்குள் காற்றோட்ட வசதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குளிரூட்டப்பட்ட திரையரங்குகளும் அரங்கினுள் 23 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை பராமரிப்பது அவசியம்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தியேட்டர் திறப்பது குறித்த பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டாலும் திறக்கப்படும் தேதியை முன்பே அறிவித்து விட்டது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்ட அன்லாக் வழிகாட்டுதல்களில் வரும் அக்டோபர் 15 முதல் இந்தியாவில் திரையரங்குகளைத் திறக்கலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது.

Tags :
|