Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிப்பு

By: Monisha Thu, 17 Sept 2020 4:02:59 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 12 ஆயிரத்து 894 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 14 ஆயிரத்து 458 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

mettur dam,cauvery,rain,canal,irrigation ,மேட்டூர் அணை,காவிரி,மழை,கால்வாய்,பாசனம்

அணையில் இருந்து காவிரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை கால்வாயில் திறந்துவிடப்படும் நீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 91.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 91.67 அடியானது.

Tags :
|
|