Advertisement

ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கு குறித்து இன்று விசாரணை

By: Nagaraj Mon, 12 Oct 2020 3:57:05 PM

ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கு குறித்து இன்று விசாரணை

இன்று விசாரணை... உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண்ணின் கொலை வழக்கு குறித்த விசாரணை இன்று (திங்கட்கிழமை) அலகாபாத் உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறவுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் பெற்றோர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

court,hadras,teen,trial,order ,நீதிமன்றம், ஹத்ராஸ், இளம்பெண், விசாரணை, உத்தரவு

இதற்காக அவர்கள் இன்று அதிகாலை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். .

பொலிஸார் தங்கள் மகளின் உடலைக்கூட காட்டாமல் இறுதிச்சடங்கு செய்ததாகவும் தங்களை மிரட்டி வருவதாகவும் அந்த குடும்பத்தினர் முறைப்பாடு அளித்துள்ளதை அடுத்து அவர்களை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|