Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு காலத்திலும் மல்லிகைப்பூ சாகுபடியில் வருவாய் ஈட்டி சாதித்த பட்டதாரி வாலிபர்

ஊரடங்கு காலத்திலும் மல்லிகைப்பூ சாகுபடியில் வருவாய் ஈட்டி சாதித்த பட்டதாரி வாலிபர்

By: Nagaraj Fri, 02 Oct 2020 6:29:49 PM

ஊரடங்கு காலத்திலும் மல்லிகைப்பூ சாகுபடியில் வருவாய் ஈட்டி சாதித்த பட்டதாரி வாலிபர்

ஊரடங்கிலும் சாதித்த பட்டதாரி வாலிபர்... மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கே.அழகுமலை, கரோனா ஊரடங்கு காலத்திலும் மல்லிகைப்பூ சாகுபடியில் வருவாய் ஈட்டி சாதித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் அழகுமலை (34). இவர் பட்டப்படிப்பு படித்தாலும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் முழுநேரமாக விவசாயம் பார்த்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கிலும் வேலையின்றிச் சோர்ந்து விடாமல் மல்லிகைப்பூ விவசாயம் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து அழகுமலை கூறும்போது, ''பட்டப் படிப்பு படித்தாலும் முழுமூச்சாக விவசாயம் பார்த்து வருகிறேன். குத்தகைக்கு நிலம் எடுத்துத் தோட்டக்கலைப் பயிர்களான கத்தரி, வெண்டை, அவரை, துவரை பயிர்கள் விவசாயம் செய்து வருகிறேன். எனக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் மல்லிகைப்பூ விவசாயமும் செய்து வருகிறேன்.

usilampatti,graduate youth,jasmine,agriculture ,உசிலம்பட்டி, பட்டதாரி இளைஞர், மல்லிகை, விவசாயம்

நடவு செய்த 6 மாதத்தில் அறுவடை செய்யலாம். வருடத்தில் மார்கழி, தை ஆகிய பனிக்காலங்களில் மட்டும் பூக்கள் பூப்பது குறைந்து விடுவதால் அறுவடை செய்ய முடியாது. நன்றாகப் பராமரித்தால் சுமார் 10-ல் இருந்து 15 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.

வெயில் காலத்தில் செம்பேன் பூச்சி தாக்குதல், பனிக்காலத்தில் புழு தாக்குதலுக்கு மருந்து அடித்துக் காப்பாற்றிவிட்டால் ஆண்டுக்கு 2 மாதம் தவிர மற்ற மாதங்களில் பலன் அடையலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 கிலோ முதல் 50 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஒருநாளைக்குக் குறைந்தது ரூ.1000 வரை கிடைக்கும். பூக்களுக்குத் தட்டுப்பாடுள்ள காலங்களில் ஒரு கிலோவுக்கு ரூ. 4 ஆயிரம் வரை கிடைக்கும்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் கை கொடுத்தது மல்லிகைப்பூதான். மற்ற நேரங்களில் கொடைரோடு பகுதியில் உள்ள மல்லிகைப்பூ செண்ட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒரு கிலோ ரூ.100க்கு கொடுத்து விடுவோம். இதன் மூலம் இழப்புகளை ஈடுகட்டி விடுவேன்'' என்றார். ஊரடங்கில் தளர்ந்து விடாமல் சாதித்து காட்டியுள்ளார் வாலிபர் அழகுமலை.

Tags :