Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தின விழாவை யொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை யொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

By: Monisha Thu, 13 Aug 2020 09:56:20 AM

சுதந்திர தின விழாவை யொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றுகிறார்கள். சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது.

சுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

independence day,tamil nadu,surveillance,police,drone ,சுதந்திர தினம்,தமிழ்நாடு,கண்காணிப்பு,போலீசார்,டிரோன்

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். சுதந்திர தின விழாவை யொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகன சோதனை நடத்தப்படுவதோடு, விடுதிகளில் சோதனை போடப்படுகிறது.

சுதந்திர தின விழா நடைபெறும் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விமானநிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மும்முரமாக வாகன சோதனை நடத்தப்படுகிறது.

சுதந்திர தின விழாவை யொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலும், எழும்பூர் ரெயில் நிலையத்திலும் நேற்று மோப்ப நாய்கள் மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் ரெயில்வே பாதுகாப்புப்படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags :
|