Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 10-ந் தேதி வரை நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்யக்கூடும்

வருகிற 10-ந் தேதி வரை நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்யக்கூடும்

By: Monisha Fri, 07 Aug 2020 12:02:26 PM

வருகிற 10-ந் தேதி வரை நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்யக்கூடும்

தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவையில் கடந்த 3 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுவும் நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இதேபோல் தென்மேற்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவாகி அனைவரையும் வியப்படைய செய்தது.

அதேபோல், இந்த ஆண்டும் மழை பொழிந்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை கொட்டி தீர்த்திருக்கிறது. அதற்கு முந்தைய நாளில் 30 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. இந்த நிலையில் இன்றும் நீலகிரி, கோவை, தேனியில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

nilgiris,coimbatore,theni,rain,avalanci ,நீலகிரி,கோவை,தேனி,கனமழை,அவலாஞ்சி

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் அதி கன மழையும், கோவை, தேனி, மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். இதேபோல் வருகிற 10-ந் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|