Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஈகைச் சுடரேற்றப்படும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஈகைச் சுடரேற்றப்படும் நிகழ்வு

By: Nagaraj Sat, 16 May 2020 3:46:31 PM

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஈகைச் சுடரேற்றப்படும் நிகழ்வு

ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவுகூரல்.. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 4ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வு குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்த லில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட பொலிஸாா் நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன்,

நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தவா்களையும், குறிப்பாக ஊடகவியலாளா்களையும் தனித்தனியாக தனது தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தாா்.

mullivaikal,memorial week,social gap,police ,முள்ளிவாய்க்கால், நினைவு வாரம், சமூக இடைவெளி, பொலிஸார்

மேலும் சமூக இடைவெளி பேணப்படவில்லை. என பொலிஸாா் குற்றஞ்சாட்டியதுடன், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் கைது செய்வேன் என அச்சுறுத்தியிருந்தாா். இதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்திற்கும் குறித்த பொலிஸ் அதிகாாிக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

Tags :