பாரத் பந்த்-ஐ ஒட்டி புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
By: Nagaraj Tue, 08 Dec 2020 09:12:22 AM
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை... வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் பாரத் பந்த் போராட்டம் தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் தனியார் பேருந்துகள், புதுச்சேரி அரசு பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கல் இயங்கவில்லை. பேருந்து நிலையத்திற்கு வந்த ஒன்றிரெண்டு தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் புதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.
விடியற்காலையில் திறக்கப்படும் டீக்கடைகள் உணவு விடுதிகள் எதுவும்
திறக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் மற்றும் நகர்
முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றார்கள்.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.