Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பு

ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பு

By: Monisha Thu, 29 Oct 2020 08:34:04 AM

ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பு

இந்தியாவில் சர்வதேச விமான பயணங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் ஹாங்காங் அரசு நிர்வாகம் பிறப்பித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

air india,airlines,hong kong,corona virus,vulnerability ,ஏர் இந்தியா,விமானங்கள்,ஹாங்காங்,கொரோனா வைரஸ்,பாதிப்பு

இந்தநிலையில் இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறி 4-வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் மும்பை ஹாங்காங் விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மும்பை ஹாங்காங் விமானங்கள் இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஹாங்காங் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :