Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தண்ணீர் கொடுக்க தாமதமானதால் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்

தண்ணீர் கொடுக்க தாமதமானதால் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்

By: Monisha Mon, 23 Nov 2020 1:50:41 PM

தண்ணீர் கொடுக்க தாமதமானதால் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்

வேப்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல்(வயது 77). இவரது மனைவி கலியம்மாள்(60). சாப்பாடு ருசியாக சமைத்து தருவதில்லை என கூறி தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்றும் சாப்பாடு ருசியாக இல்லை எனவும், குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறும் தங்கவேல் கூறியுள்ளார்.

ஆனால் கலியம்மாள் தண்ணீர் கொண்டு வர தாமதமானது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தங்கவேல், தனது மனைவி என்றும் பராமல் அவரை அடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

water,taste,husband,wife,investigation ,தண்ணீர்,ருசி,கணவன்,மனைவி,விசாரணை

இதில் சுவற்றில் தலை மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கலியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொலை ஆகாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.

Tags :
|
|
|