Advertisement

தமிழை பிழையின்றி எழுத தெரியாது; திமுக எம்.பி, ஒப்புதல்

By: Nagaraj Tue, 15 Sept 2020 3:28:34 PM

தமிழை பிழையின்றி எழுத தெரியாது; திமுக எம்.பி, ஒப்புதல்

பிழையின்றி எழுத தெரியாது... தமிழை பிழையின்றி எழுத தெரியாது,'' என, தர்மபுரி லோக்சபா, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்புக்கு எதிராக, தி.மு.க.,வினர் குரல் கொடுத்து வருகின்றனர். 'ஹிந்தி தெரியாது போடா...' என்ற வாசகங்கள் அடங்கிய, 'டி-சர்ட்' அணிந்து திரைப்பட பிரபலங்கள் அந்த போட்டோக்களை இணைய தளங்களில் வெளியிட்டனர்.

இதற்கு தி.மு.க., - எம்.பி., கனிமொழியும் ஆதரவு தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், இணைய தளத்தில், பா.ஜ, ஆதரவு கருத்துக்களை வெளியிட்டு வரும், மாரிதாஸ், ஐ.பி.எஸ்., பதவியில் இருந்து விலகி, தற்போது, தமிழக, பா.ஜ.,வின் மாநில துணை தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணாமலை ஆகியோர், தி.மு.க.,விற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இந்த நேரத்தில் தான், தர்மபுரி லோக்சபா தொகுதியின், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், டுவிட்டர் இணைய தளத்தில், அண்ணாமலையுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். அப்போது, 'நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்க தயாரா?' என, அண்ணாமலையை கேட்டார். அதற்கு அண்ணாமலையும் ஒப்புக் கொண்டார். ஆனால், விவாதம் நடக்கவில்லை.

manford school,salem,dharmapuri mp,tamil ,மான்போர்டு பள்ளி, சேலம், தர்மபுரி எம்.பி, தமிழ்

ஒரு கட்டத்தில் செந்தில்குமார் பின் வாங்கினார். அதே நேரத்தில், செந்தில்குமாருக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இது பற்றி, எம்.பி., செந்தில்குமார் கூறியதாவது:

நான் மான்போர்டு பள்ளியில், துவக்க கல்வி முதல், மேல்நிலை கல்வி வரை படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே விருப்ப பாடமாக தமிழ் படித்தேன். அதை தொடர்ந்து, பிரெஞ்ச் பாடத்தை படித்தேன்.
அதே நேரத்தில் ஹிந்தியை முழுமையாக எழுத, படிக்க, பேச தெரியாது. தமிழில் பேசும்போது, பிழையின்றி உச்சரிக்க முடியும்.

ஆனால், துவக்கக் கல்வி முதல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் பள்ளி, கல்லூரிகளில் படித்ததால், தமிழை முழுமையாக எழுத்துப் பிழையின்றி எழுத தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். தர்மபுரி, தி.மு.க.,-எம்.பி., செந்தில்குமார், துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி படிப்பை, சேலம் மாவட்டம், ஏற்காடு மான்போர்டு பள்ளியில் படித்துள்ளார். அங்கு, துவக்கக் கல்வி வரை மட்டும் தமிழை, ஒரு பாடமாக படித்துள்ளார்.

தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., படித்து, சென்னை ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|