Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புகிறேன் - நடிகை கங்கனா

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புகிறேன் - நடிகை கங்கனா

By: Karunakaran Sat, 12 Sept 2020 09:42:11 AM

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புகிறேன் - நடிகை கங்கனா

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக, மும்பை போலீசாரை நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மேலும் அவர், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதால், அவருக்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சிவசேனாவுக்கும், நடிகை கங்கனாவிற்கும் இடையே கடும் வார்த்தை மோதல் உண்டானது.

இந்நிலையில் பலத்த எதிர்ப்பை மீறி அவர் மும்பை வந்தார். அப்போது, பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரனாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் கங்கனா ரனாவத் மற்றும் உத்தவ் தாக்கரே அரசு இடையே மோதல் வலுத்து வருகிறது.

congress,interim leader,sonia gandhi,actress kangana ,காங்கிரஸ், இடைக்காலத் தலைவர், சோனியா காந்தி, நடிகை கங்கனா

இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவில் உங்கள் அரசு, என்னை நடத்தும் விவகாரம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், சட்ட மேதை அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உங்கள் அரசை உங்களால் கேட்க முடியவில்லையா? பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின் அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்களென நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :